முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீமஹாலட்சுமி திருக்கோவில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் பரவசம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி  தேனி அருகே வடபுதுப்பட்டி ஜெ.ஜெ காலனியில் அமைந்துள்ள குரும்பா வேடவர் குல கோவிலான ஸ்ரீமஹாலட்சுமி திருக்கோவில் திருவிழா கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமையன்று மாலை விநாயகர், நவமூர்த்திகளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையும், கிராம தெய்வம் ஸ்ரீஜக்கம்மாளுக்கு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து பூசாரி வீட்டிலிருந்து ஆபரண பெட்டி எடுத்து வந்து அம்பாளுக்கு சக்தி கரகம் எடுத்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, அழகுகட்டை ஏறி அம்பு போட்டு தலையில் சக்தி தேங்காய் உடைத்தலும் நடைபெற்றது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து பரவசமடைந்தனர். அதனை தொடர்ந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, கிடாவெட்டி அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு மெகா அன்னதானம் நடைபெற்றது. இன்று காலையில் மஞ்சள் நீராட்டமும், அம்மன் பூஞ்சோலை செல்லுதலும் நடைபெற்றது.  இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து