எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, நேற்று புதுடெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து 20 வேகன்களில் நிலக்கரி அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் கோயல், 16 வேகன்களில் நிலக்கரி அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார்.
புது டெல்லியில் ரயில் மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஷ் கோயலை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் பிறகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்விபரம் வருமாறு:-
தமிழகத்தில் எதிர்கட்சிகள் எல்லாம் அரசியல் செய்வதற்காக மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்பி கொண்டியிருக்கின்றார்கள். தமிழகத்தில் எப்பொழுதுமே மின்வெட்டு வராது. மின்வெட்டு வராது மட்டுமல்லாமல் மின் மிகை மாநிலமாகவே இருந்து வருகிறது. இந்த அளவுகோளை மத்தியரசினுடைய சமன்பாட்டு அறிக்கையிலேயே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நான் கடந்தமுறை பேட்டி அளிக்கின்ற பொழுது, மே மாதம் கடைசி வரையிலிருந்து செப்டம்பர் மாத கடைசி வரையில் அல்லது அக்டோபர் முதல் வாரம் முதல் காற்றாலை மின்சாரம் இருக்கும். அந்த காற்றாலை மின்சாரம் இருக்கின்ற பொழுது அனல் மின் நிலையங்கள் எல்லாம் பாரமரிப்பு பணிக்காக (மத்திய தொகுப்பிலிருந்து வருகின்ற அனல் மின் நிலையம் மற்றும் மாநிலத்தின் அனல் மின்நிலையம்) 2 மாத காலங்களுக்கு எடுத்து க்கொள்ளப்படும் என்றேன்.
சில இடங்களில்...
செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் திடீரென்று 3000 மெகாவாட்டிலிருந்து ஜிரோவுக்கு வந்துவிட்டது. அன்றைய தினம் மற்றும் 10-ம் தேதி அன்றும் அரைமணி நேரம் தமிழகத்தில் சுழற்ச்சி முறையில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஆகையால் அடுத்த நாள் நாங்கள் உடனடியாக அனல் மின் நிலையங்களை செயல்படுத்தியும் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து உடனடியாக மின்சாரம் தர வேண்டும் என்று கேட்டு நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் அடுத்த நாளிலிருந்து சகஜநிலை திரும்பிவிட்டது.
நிலக்கரி வர தாமதம்
நிலக்கரியை பொறுத்தவரை எப்பொழுதுமே தமிழ்நாடு அனல் மின் நிலையம் 15 நாட்களுக்கு வேண்டிய நிலக்கரியை வைத்திருப்போம். அந்த அடிப்படையில் தான் கடந்த 3 மாதகளாக 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் இருந்தது. கடந்த வாரத்தில் ஒடிசாவில் மழையிருந்த காரணத்தால் ஒரு வார காலம் அங்கேயிருந்து நிலக்கரியை கொண்டுவர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் அந்த கையிருப்பு குறைந்து விட்டது. உடனடியாக நிலக்கரி நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலக்கரி வரத்தை உயர்த்த வேண்டுகோள் விடுத்து அதன்படி நிலக்கரியை அதிகமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் 3 நாட்கள் மேட்டூரிலும் வடசென்னையில் 3 நாட்களும் தூத்துக்குடியில் 6 நாட்களும் கையிருப்பு இருக்கின்றது.
மத்திய அமைச்சர் சம்மதம்
இன்றைய தினம் மத்திய இரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தினந்தோரும் கொடுக்கின்ற ரயில் ரேக்குகளை 16 ஆக உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் கையிருப்பை அதிகப்படுத்துவதற்காக இன்னும் 4 ரேக்குகளை சேர்த்து 20 ரேக்குகளாக கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் 16 ரேக்குகள் தருவதாக கூறியிருக்கிறார். சூழ்நிலை சரியானதும் அதிகரித்து கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.
தவறான பிரச்சாரம்
நேற்று காலையில் மின் நுகர்வின் அளவு குறைவாக இருந்ததன் காரணத்தினால் தூத்துக்குடியில் 210 மெகாவாட்டை உற்பத்தியை நாங்கள் குறைத்து இருக்கிறோம். நிலக்கரி இல்லையென்று குறைக்கவில்லை, வேண்டுமென்றால் நிருபர்களை அழைத்துச்சென்று கையிருப்பு நிலக்கரிகளை காட்டுகின்றேன். ஆனால் எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மின்நுகர்வு குறைந்திருக்கின்ற காரணத்தினாலே தூத்துக்குடியில் 210 மெகாவாட்டையும் அதேபோல மேட்டூரில் 420 மெகாவாட் அளவையும் குறைத்திருக்கிறோம். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபெய்து கொண்டு இருக்கின்ற காரணத்தால் மின் தேவையும் குறைந்திருக்கின்றது.
மின்வெட்டு வராது
அதேபோல் இன்றைய தினத்திலிருந்து காற்றாலை மின்சாரமும் 2000 மெகாவாட் வந்திருக்கின்ற காரணத்தினால் அதிகமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாம் இருப்பு வைக்கமுடியாது. அதனால் அனல் மின் நிலையத்திலுள்ள மின்சார உற்பத்தியை குறைத்திருக்கிறோம். இது ஏதோ மக்கள் மத்தியில் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும் என்பதுபோல ஒரு தவறான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்று தெளிவாக சொல்வதற்கு கடமைபட்டிருக்கிறேன்.
பரிசீலிப்பதாக உறுதி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியதற்குப்பின் 2 நாட்களாக 8 ரேக்குகள் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது 13 ரேக்குகளாக உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய முன்தினம் கூட 17 ரேக்குகள் அனுப்பியிருக்கிறார்கள். இன்றைய தினத்திலிருந்து 16 ரேக்குகள் தினந்தோரும் அனுப்புவதாக கூறியிருக்கிறார்கள், நிலக்கரியின் கையிருப்பை அதிகபடுத்த வேண்டும் என்பதற்காக 20 ரேக்குகளை கேட்டிருக்கிறோம். முடிந்தவரை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
விரைவில் நடவடிக்கை
ஏதோ தமிழகத்தில் பெரிய மின்வெட்டு வருவதைப்போல ஒரு பீதியை கிளப்பி விட்டார்கள். எப்போது எல்லாம் குறைகின்றதோ அப்போதெல்லாம் மத்திய அரசை சந்தித்து நாங்கள் அதிகப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அவர்களும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்பொழுது இருப்பு குறைவாக இருப்பதால் நாங்கள் வெளிநாட்டிலிருந்து 30 லட்சம் டன் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி கொடுத்திருக்கின்றார்கள். டெண்டர் போட்டு இருக்கின்றோம் இப்போழுது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 6 லட்சம் டன் உடனடியாக ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கின்றது. மீதி நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் மிகை மாநிலமாக...
பொதுவாக எந்த மாநிலத்தை எடுத்தாலும் அவர்களே முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்து அதை மின் மிகை மாநிலமாக ஆக்க முடியாது. மத்திய தொகுப்பிலிருந்து ஏன் வாங்குகிறீர்கள் என கேட்கலாம். மத்திய அரசு யாருக்கு கொடுக்கிறது மாநில அரசுக்குதானே கொடுக்கிறது. எல்லா மாநிலத்திற்கும் பிரித்து கொடுக்கிறார்கள். கூடங்குளம் மின்சாரம் நமக்கு 50 சதவீதமும் மற்ற மாநிலங்களுக்கு மீதியையும் பிரித்து கொடுக்கிறார்கள். அப்படி மத்திய தொகுப்பிலிருந்து வருவது, அதே போல தனியார் கொடுப்பது மத்திய அரசு அதை கேட்டு வாங்கி அதையெல்லாம் சேர்த்தால்தான் வருமே ஒழிய எந்த மாநிலத்திலுமே சொந்த உற்பத்தியை வைத்து மின் மிகை மாநிலமாக இருக்காது.
முழு உற்பத்தியை...
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும் கிடையாது. எதிர் கட்சிகள் தவறான அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) கூட ராமதாஸ் சொல்லியிருக்கிறார். எப்போதுமே தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது இல்லை என்று சொல்லியிருக்கின்றார். நான் தெளிவாக சொல்லுகின்றேன் இந்திய சமன்பாட்டு அறிக்கையிலேயே தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருக்கிறது என்று. ஆனால் ஒரு மாநிலமே தேவையான அளவு முழு உற்பத்தியை செய்ய முடியாது. எல்லா மாநிலமுமே மத்திய தொகுப்பிலிருந்து வாங்குகின்றார்கள் அதைபோல தனியாரிடமும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
18,000 மெகாவாட்...
நமக்கு 15,000 மெகாவாட் இன்றைக்கு தேவை. நம்மிடம் 18,000 மெகாவாட் இருக்கின்றது. இதில் காற்றாலை, சூரிய மின்சக்தி கிடையாது. இதெல்லாம் இல்லாமல் 18,000 மெகாவாட் இருக்கின்றது. ஆக தமிழகம் எப்பொழுதுமே மின் மிகை மாநிலம் தான். இதை எத்தனை எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்தாலும் இப்பொழுது பத்திரிக்கை நண்பர்கள் இருக்கின்றீர்கள், அவர்கள் சொல்கின்றார்கள், எதிர்கட்சிகள் சொல்கின்றார்கள், யாராவது உங்களுடைய நண்பர்களை, உங்கள் வீட்டிலேயேகூட கேட்டுப்பாருங்கள். ஏதாவது ஒரு நிமிடம் தமிழகத்தில் மின் வெட்டு இருந்திருக்கின்றதா என்று. சீர்காழியில் காற்று மழையினால் கிட்டத்தட்ட 238 மின் கம்பங்கள் வீழ்ந்து விட்டன. அதை சரிசெய்வதற்கு ஒரு நாள் ஆகலாம், உடனடியாக அதை தவறான பிரச்சாரம் செய்கின்றார்கள் மின்வெட்டு என்று.
அரசியலுக்காக அவதூறு...
இயற்கை சீற்றத்தில் மின்கம்பங்கள் விழுவது, டிரான்ஸ்பார்மர்கள் விழுவது என்பது சாதாரனமான ஒன்றுதான். அதை ஓரிரு நாட்களில் நாங்கள் சரி செய்கிறோம். வர்தா புயல் டிசம்பர்ல வந்தப்ப வந்த வேகத்திலே மின்சாரவாரியம் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் மூன்று நாட்களிலேயே 100 சதவீத மின்சாரத்தை கொடுத்தோம். இதையே நீங்க அமெரிக்காவில் பார்த்தால் 10 நாட்கள் ஆகும். விசாகப்பட்டிணத்தில் 10 நாட்கள் ஆகும். ஆனால் மின்சார வாரியம் தொடர்ந்து அரசு வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் கிடையாது. அதேபோலவே ஒக்கிபுயல் கடந்த வருடம் கன்னியாகுமரியில் வந்தது. கிட்டதட்ட 50 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. அன்றே அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றிக்கு மின்சாரம் கொடுத்துவிட்டோம். மூன்று நகராட்சிகளுக்கு 2 நாட்களில் மின்சாரம் கொடுத்துவிட்டோம். அவ்வளவு வேகமாக உயிரை பணயம்வைத்து மின்சாரவாரிய தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். வேண்டுமென்றே அரசியலுக்காக அவதூறு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க ஆட்சியில் கூட...
எதிர்பாராதவிதமாக செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் முழுமையாக நின்று விட்டது. அதனால் தான் அந்த 2 நாட்கள் பிரச்னையும் வந்தது. நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்பது சரியில்லை. மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களிளும் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாகத்தான் உள்ளது. அங்கெல்லாம் நிலக்கரியை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில்தான் நிலக்கரியை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் கூட நிலக்கரி ஒரு நாள் மட்டுமே இருப்பு இருந்ததை மறந்து விட முடியாது. அரசியல் செய்வதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் இதை வைத்து கொண்டு மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதி கிளப்புகிறார்கள்.
நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம் தமிழகம் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் மின்சாரத்தை எடுத்து செல்லும் மின் தொடரமைப்பு வசதி குறைவு என்பது தவறானது. தமிழக அரசு 5000 மெ.வாட் அளவிற்க்கு மின் தொடரமைப்பு வசதியை செய்துள்ளது. இதுவே தி.மு.க. ஆட்சியில் இந்த அளவிற்கு செய்யவில்லை. நாங்கள் அதிக அளவில் மின் கட்டமைப்பு வசதியை அதிகபடுத்தியுள்ளோம்.
உற்பத்தி குறைக்கப்படும்...
இன்று மின் நுகர்வு குறைந்துள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியை குறைத்து உள்ளோம். ஆனால் ஊடகங்கள் நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம் என்கிறார்கள். காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது அனல் மின் உற்பத்தி குறைக்கப்படும். அப்போது தவறான பிரசசாரத்தை செய்கிறார்கள். காற்றாலை மின்சாரத்தை நாங்கள் முழுவதுமாக பயன்படுத்துகிறோம் இல்லையென்றால் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று ஆணை பெறுவார்கள். காற்றாலை மின் உற்பத்தி குறையும் போது அனல் மின் உற்பத்தியை துவக்க சுமார் 12 மணி நேரம் ஆகும். அதனால் தான் 9 மற்றும் 10ம் தேதிகளில் மின் பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.