முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறுகிறார் கருணாஸ் மீது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் கருணாஸ் நிலை தடுமாறியிருப்பதாக  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு...முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் தொணியில்பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிலை தடுமாறியுள்ளார்....இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, கருணாஸ் பேச்சு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதற்கிடையே மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கருணாஸ் அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் நிலை தடுமாறியுள்ளார் என தெரிவித்தார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து