முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டர் பற்றிய புகாரை சி.பி.ஐ.விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை தி.மு.க. வுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான  டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்கஇடைக்காலத் தடை விதித்தது  சுப்ரீம் கோர்ட்.

டெண்டர் முறைகேடு தொடர்பாக தி.மு.க. அளித்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில்   சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், எதிர் மனுதாரர்களான தி.மு.க.விடம்,   சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பினார். அதாவது, டெண்டரில் முறைகேடு நடந்தது என்றால், அந்த டெண்டரை ரத்து செய்யக் கோரிதானே புகாரை அளித்திருக்க வேண்டும். ஏன் மாநில முதல்வர் மீது புகாரை அளித்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்.இந்த கேள்வி குறித்து விளக்கம் அளிக்குமாறு திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பவும்    சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த கேள்விக்கு தி.மு.க. உரிய பதிலை அளித்தால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடைபெறும். தவறும்பட்சத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் நிலையும் ஏற்படும்.
  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து