முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி ஏற்படுத்தப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் : இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

13-ஆவது கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு, சிங்கப்பூரில்  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் அவர் பங்கேற்றது, இது 5-ஆவது முறையாகும்.

கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில், 10 தென் கிழக்கு ஆசிய நாடுகளும் (இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பின்ஸ், வியத்நாம், மியான்மர், கம்போடியா, புருணே, லாவோஸ்), ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென்கொரியா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. மேலும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடுநிலையோடு பின்பற்ற வேண்டும் என்பதிலும் உறுதியுடன் உள்ளது. அதுமட்டுமன்றி, கிழக்கு ஆசிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்; கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் இன்னும் வலுப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து