முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மனைவி

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா, ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவரை சரமாரியாக அடி கொடுத்த பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முசாபர் நகரை சேர்ந்தவர் துலாரே. இவரது மனைவி சோனியா. இவங்க ரெண்டு பேருக்கும் 2 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஆனால் கடந்த 5 மாதத்திற்கு முன் இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார் துலாரே. அதனால் தன் குடும்பத்தில் இதை பற்றி சொன்னதும் அவர்களும் உடனே பஞ்சாயத்தை கூட்டினார்கள்.

இப்போது இருவரையும் சமாதானப்படுத்தி வாழ வைக்கலாம் என்று ஊர் பெரியவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் துலாரே அதற்கு ஒத்து வரவில்லை. அதனால் தலாக் சொல்லி முடிச்சி விட்டு விடலாம் என்று ஊர்மக்கள் முடிவுக்கு வந்தார்கள். அதன்படி துலாரேவை 3 முறை தலாக் சொல்ல சொன்னார்கள். துலாரேவும் தலாக் சொல்ல ஆரம்பித்தார்.  3-வது முறையாக தலாக்  சொல்ல போனார். ஆனால் அதற்கு முன்பு சேரில் உட்கார்ந்திருந்த சோனியா திடீரென எழுந்து, கணவர் துலாரேவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்து விட்டார். துலாரே இதை எதிர்பார்க்கவே இல்லை. இதனால் அவமானமடைந்த துலாரே கோபம் தலைக்கேறி சோனியாவை திருப்பி அடித்தார். இருவரும் தொடர்ந்து தாக்கி கொள்ளவும், அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தனர். சோனியா பளார் பளார் என்று புருஷனை அடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து