முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் பிரதமராகி விடலாம் என்ற நரேந்திர மோடியின் கனவு பலிக்காது: சித்தராமையா

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

மைசூரு : மீண்டும் பிரதமர் ஆகலாம் என்ற மோடியின் கனவு பலிக்காது என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வராத திட்டங்களை தற்போது கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார். அதாவது அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாத, ஏழை மக்களின் வாக்குகளை கவருவதற்காக இப்படியொரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். அவர் என்னதான் திட்டத்தை கொண்டு வந்தாலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைத்தான் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் மீண்டும் பிரதமராகி விடலாம் என்று நினைக்கும் நரேந்திர மோடியின் கனவு பலிக்காது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து