முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது: ஓவைசி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித்தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்தார்.

தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒவைசி மேலும் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீர் என்பது, எப்போதுமே இந்தியாவின் அங்கமாகும். எனவே, காஷ்மீரில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரசோ பா.ஜ.க.வோ, இதுவரை மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு கட்சியிடமும், காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இருக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்துக்கென ஒரு நிலையான கொள்கை இருக்க வேண்டும். காஷ்மீர் விவகாரத்தை ஒரு ஜேம்ஸ் பாண்ட் மனோபாவத்தில் கையாளக் கூடாது. அதை ராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து