முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான கடைசி ஒருநாள்: களமிறங்குகிறார் டோனி: சஞ்சய் பாங்கர் தகவல்

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், அனுபவ வீரர் டோனி விளையாடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

தொடரை வென்றது...

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடு கிறது. இப்போது, 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி, தொடரை வென்றுவிட்டது.

பரிதாப தோல்வி...

இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியடைந்தது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் போல்ட், கிராண்ட்ஹோம் ஆகியோரின் ஸ்விங்-கை சமாளிக்க முடியாமல், இந்திய வீரர்கள் அடுத்த டுத்து விக்கெட்டு களை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி, 19.1 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

காயம் காரணமாக...

இந்தப் போட்டியிலும் இதற்கு முந்தைய போட்டியிலும் காயம் காரணமாக, அனுபவ வீரர் டோனி, ஆடும் லெவனில் இல்லை. இதனால் வெலிங்டனில் இன்று நடைபெறும், 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் அவர்  ஆடுவது உறுதியாகி இருக்கிறது. இதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித் துள்ளார். ’’டோனியின் காயம் குணமாகி விட்டது. இன்று நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பார்’’ என்றார் பாங்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து