முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் குல்காமில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் கெல்லாம் கிரமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் இரவே பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதனை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க, அருகிலுள்ள கிராமங்களில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குல்காம் பகுதியில் வதந்திகள் பரவுவதை தடுக்க நேற்று காலை முதல் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து