முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 குழந்தைகள் உள்ள நிலையில் 4-வது முறையாக பிரான்ஸ் கோடீசுவரரை மணக்கிறார் - ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிரான்ஸ் கோடீசுவரரை மணக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் 1996-ம் ஆண்டு டி.வி. பிரபலம் ஜானி லீ மில்லரை திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். பின்னர் நடிகர் பில்லி பாப் தாம்டனை 2-வது திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 3 ஆண்டில் முடிவுக்கு வந்தது. 3-வது முறையாக நடிகர் பிராட் பிட்டை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி 4-வது திருமணத்துக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் சேட்டோ மிராவல் என்பவரை ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், பிரான்சில் குடியேறப்போவதாகவும் லைப் அண்ட் ஸ்டைல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  ஏஞ்சலினா ஜோலிக்கு 6 குழந்தைகள் இருப்பதும், அதில் சில குழந்தைகள் தத்து குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து