முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா உடனான வர்த்தக பேச்சில் நல்ல முன்னேற்றம்: அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 30 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், சீனா உடனான வர்த்தக பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனப் பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகள் விதித்தன. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் முடிவில் அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். அப்போது, இருவரும் வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்து கொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும். இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  அதை தொடர்ந்து அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவினர் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், வர்த்தக மந்திரி ஸ்டீவன் மனுசின் தலைமையில் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது நாடு பெரிதான விதத்தில் செயல்படுகிறது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து