முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : அமராவதியில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டசபை  தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

ஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அமரவாதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர்  காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து