முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போன்று தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், வரும் 18-ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்தவ அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், பெரிய வியாழன் பண்டிகையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து