எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி.- தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற அமைப்பினை வேலம்மாள் கல்வி குழும சேர்மன் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.
வேலம்மாள் கல்விக்குழும அறக்கட்டளையின் கீழ் செயல்படும் வண்ணம் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடங்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் என்ற அமைப்பு தேனி வி.கே வேலுச்சாமி சின்னம்மாள் கல்யாண மஹாலில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் விழா பேருரையாற்றினார். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் கணேஷ் நடராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் சிபிகுமரன் ஆகியோர் விரிவுரையாற்றினார்கள். இதில் வேலம்மாள் கல்வி குழும ஆசிரியர்கள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் 1986-ல் சாதாரண கீற்றுக்கொட்டகையில் 183 மாணவர்களுடனும், 13 ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்டது. இன்று 65 கல்வி நிறுவனங்களையும், 12500 ஊழியர்களையும், 1.25 இலட்சம் மாணவர்களையும் கொண்டு பணியாளர்களின் உதவியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையானது, கல்வி பணி மட்டுமின்றி சமுதாயப்பணிகளிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக கார்கில், குஜராத் பூகம்பம், ஒரிசா புயல், கேரளா இயற்கை பேரழிவு, தமிழ்நாட்டில் சுனாமி, கஜாபுயல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் அயம்பாக்கம் சாலை, டி.எஸ்.கிருஷ்ண நகர் ஸ்கூல் ரோடு, தேனி குமுளி ரோடு வேலம்மாள் இணைப்பு சாலை, மதுரை மாட்டுதாவணியில் கழிப்பறை கட்டியது, பனையூர் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை ரூ.18 இலட்சம் செலவில் அகற்றி சுத்தம் செய்தது. ஹர்வர்டு தமிழ் இருக்கை அமைக்க பங்காற்றியது. வருடந்தோறும் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 மற்றும் 50 சதவீதம் கல்வி சலுகை வழங்கி உள்ளது.
இந்த சமுதாய பணியினை விரிவு படுத்தும் விதமாக வேலம்மாள் சமுதாயப்பணி என்கின்ற அமைப்பின் மூலம் மருத்துவ சேவையையும், கல்விப்பணியையும் முழுமையாக தொடர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்கெடுப்பு செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில், 12-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெறும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு ரூ.25000 வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவிதொகை வழங்குவது, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேயி மெயின் முதலிய தேர்வுகளில் பங்குபெற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 54 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விடுதிக்கட்டணத்துடன் கூடிய கல்வி கட்டண வசதி அளிப்பது, ஆசிய அளவில், உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் 9 பேரை தேர்வு செய்து அதற்கான செலவுகளை ஏற்பது, மேற்கண்ட 9 மாவட்டங்களிலுள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து, வேலை வாய்ப்பளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்-க்கு உதவியாளர்களாக நியமிப்பது, 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், இரயில்வே, வங்கி, இராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழிகாட்டுவதற்காக பயிற்சி அளிப்பது, கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ உதவி அளிப்பது, வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆழ்ந்த மருத்துவ அறிவு பெற புறநோயாளிகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்;ப்பு அளிப்பது என்ற குறிக்கோளுடன் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.