முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு: ஒருவர் கைது

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தேனி
Image Unavailable

போடி, - போடி அருகே, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஜனனி (35). இவரது மகள் 9 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளி விடுமுறையில் இருந்துள்ளார். அப்போது  இதே ஊரை சேர்ந்த நவீன் (18) என்பவர் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனை ஜனனியும் அவரது கணவரும் கண்டித்துள்ளனர்.
     இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த மதன்குமார் (29) என்பவர் இருவரது காதலுக்கும் உதவுவதாகக் கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி இருவரையும் 18.5.2019 ஆம் தேதி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
      அங்கு மாணவியை மதன்குமாரும், நவீனும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வியாழன் கிழமை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் தாய் ஜனனி போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (தாலுகா பொறுப்பு) நிர்மலா தேவி, போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மீதும் பாலியல் பலாத்காரம் செய்தல், போக்சோ சட்டம், மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர். மேலும் நவீனை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து