முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல - மம்தா பானர்ஜி சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்பேன். ஏனெனில் எனக்கு பயம் இல்லை என்றும் மம்தா தெரிவித்தார். 

பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்தார். இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு 23 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று என்னுடைய முதல்வர்  பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தேன். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.

மேற்கு வங்காளத்தில் ஓட்டுகளை பெறுவதற்காக மதவாத பிரிவினையை மக்களிடையே பா.ஜ.க. தூண்டியது. பா.ஜ.க. பெற்ற மிகப்பெரிய வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயல்பட்டன. பா.ஜ.க.வின் தேர்தல் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு உதவுவதற்காக சில அமைப்புகளும், வெளிநாட்டு சக்திகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் அவசர நிலையை போல் நெருக்கடியை உருவாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் கமி‌ஷன், ஊடகங்கள் போன்றவை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்பேன். ஏனெனில் எனக்கு பயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து