முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கணினி மூலம்...

தேனியில் தானியங்கி மின்தடை நீக்கும் பதிவு மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் மூலம், மின்தடை ஏற்படும் பகுதிகளை கணினி மூலம் தானாகவே அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து புகார் அளிக்கவேண்டிய அவசியம் எழாது.

போதுமான நிதி...

அதன் பின்னர் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில், கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட கலெக்டர்கள் கோரிய நிதியை தமிழக அரசு வழங்கி உள்ளது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து