முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு இரண்டாவது முறையாக பறிபோய் உள்ளது. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் சிலர் இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் நேற்று பதவியேற்று கொண்டனர். ஆங்கிலத்தில் மாநில வாரியான அகரவரிசைப்படி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நின்று வெற்றி பெற்ற சோனியா காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் நேற்று பதவியேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள்.

இதைதொடர்ந்து, பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் மறுத்து விட்டதால் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் தொகுதி எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து