முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த 700 கிலோ குட்கா பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 5 பேர்களைக் கைது செய்தனர்.
பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த ஒரு ஆம்னி பஸ்ஸில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.சக்திவேலுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஆம்னி பஸ்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டன. இதனையறிந்து கொண்ட குட்கா கடத்தும் கும்பல் திண்டுக்கல் அடுத்த அண்ணாமலையார் மில்ஸ் காலனி பகுதியில் ஆம்னி பஸ்ஸை நிறுத்தினர். அந்த பஸ்ஸில் இருந்த குட்கா பொருட்களை வேறு கார் மற்றும் மினி லாரியில் ஏற்ற முயன்றனர். இருந்த போதும் அங்கு விரைந்த அம்பாத்துரை போலீசார் குட்கா கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். 700 கிலோ குட்காவை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த புகாரி உட்பட 3 பேரையும் கடத்தலுக்கு உதவிய ஆம்னி பஸ் டிரைவர்களாக சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பார்த்தீபன் உட்பட 2 பேர் என 5 பேர்களை கைது செய்தனர். மேலும் குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மினிலாரியையும் கைப்பற்றினர். இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனராஎன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து