முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்முவில் தியாகிகள் தினம் அனுசரிப்பு: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்முவில் உள்ள பகவதிநகர் அடிவார முகாமில் இருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரை நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் நேற்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  ஜம்முவில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஜம்முவின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் யாரும் புறப்பட்டு செல்லவில்லை.

தியாகிகள் தினத்தையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்த பிறகே, யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 
ஜம்முவில் உள்ள குகைக்கோவிலில் தோன்றி உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக, பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து இதுவரை 58 ஆயிரத்து 427 பேர் சென்றுள்ளனர்.  காஷ்மீர் டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய அப்துல் காதீர் 1931-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 22 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து