முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் பதவி விலகக் கோரி பாகிஸ்தானில் எதிர்கட்சியினர் பேரணி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அந்நாட்டின் எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றனர்.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதையடுத்து சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் இம்ரான் கான் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பேரணியாக சென்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த பேரணியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கருப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.மேலும், பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து