முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் - அனைவரும் பத்திரமாக மீட்பு

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

மும்பை : மும்பையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது. அதில் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப். படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்து சென்றன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி ரயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், வெள்ளத்தில் சிக்கிய பயணிகள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பதல்பூரில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மற்றவர்களை மீட்கும் பணியும் விரைவில் முடிவடையும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து