முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் வாக்களிக்காத மக்கள் மறைமுகமாக சொல்வது என்ன? முன்னாள் ஜனாதிபதி பிரணாப் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

தேர்தலில் வாக்களிக்காத மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு மறைமுகமாக தெரிவிப்பது என்ன என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜஸ்தான் மாநில சட்டசபையில் விளக்கமளித்து பேசினார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள சட்டப்பேரவையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  இந்திய மக்களவை தேர்தல்களில் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வென்றிருந்த போதும், 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறப்படவில்லை. இதன் மூலமாக மக்கள் ஒரு முக்கியமான செய்தியை வெற்றிப் பெற்றவர்களுக்கு மறைமுகமாக கூற வருகின்றனர். அது என்னவென்றால், தங்களுக்கு வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

இந்திய பாராளுமன்றம் என்பது பிரெஞ்சு அரசின் பரிசாகவோ, அல்லது எதார்த்தமாகவோ நமக்கு கிடைக்கவில்லை. நம் மக்களின் பங்களிப்பு, போராட்டம், தடுமாற்றங்கள், முயற்சி போன்றவற்றினாலேயே கிடைத்தது என்றும், பாராளுமன்ற வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் அவரது பயணம், நிர்வாக மற்றும் நீதித்துறையின் பங்கு, வரலாற்று அம்சங்கள், அரசியலமைப்பு ஆகியவை குறித்து விரிவாக பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து