முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது சரியான தருணம்: இம்ரான்கான்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது தான் சரியான தருணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதாவது:-எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அப்பாவி மக்கள் மீது இந்தியா தாக்கியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த சர்வதேச அச்சுறுத்தல் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியிருந்தார். காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது தான் சரியான தருணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து