முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமஸ்கிருதத்தின் பங்களிப்பால்தான் பேசும் கணினிகள் சாத்தியமாகும் - மத்திய அமைச்சர் பொக்ரியால் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : உலகில் எதிர்காலத்தில் பேசும் கணினிகள் சாத்தியமாகும் என்றால், அது சமஸ்கிருதத்தின் பங்களிப்புத்தான். உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

மும்பை ஐ.ஐ.டி.யில் 57-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நாசாவின் கூற்றுப்படி உலகில் எதிர்காலத்தில் பேசும் கணினிகள் உருவாவது சாத்தியம் என்றால், அது சமஸ்கிருத மொழியின் பங்களிப்பாகத்தான் என்று நாசா தெரிவித்துள்ளது. சமஸ்கிருதம் என்பது ஒரு அறிவியல் மொழி, நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் எழுதுகிறோம் என்று நாசா தெரிவித்துள்ளது. சக்ரா ரிஷி என்பவர்தான் ஆயுர்வேதத்துக்கு முக்கியமான பங்களிப்பு செய்தவர். அணு மற்றும் மூலக்கூறுகளை முதன் முதலில் ஆய்வு செய்தவரும் அவர்தான். அணுவையும், மூலக்கூறுகளையும் உலகில் யார் முதன்முதலி்ல ஆய்வு செய்தவர் என்று நினைக்கிறீர்கள் சக்ரா ரிஷிதான். உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுனரும் சுஷ்ருதாதான். இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து