எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
.துணை ஜனாதிபதி பதவியில்.வெங்கையா நாயுடு இரண்டாண்டு நிறைவு செய்தது குறித்து வெளியிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்கிறது திருக்குறள். காண்பதற்கு எளியவராகவும், கடுஞ்சொல் பேசாதவராகவும் விளங்கும் அரசர் ஆளும் நாட்டை உலகம் புகழும் என்ற வள்ளுவரின் கூற்றுப்படி எல்லோரும் எளிதில் அணுகும்படியான எளியவராகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியவரும், எல்லோரும் விரும்பும்படியாக இனிமையாகபேசிப் பழகக் கூடியவராகவும், பாரத மக்களுக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. உழைப்பே உயர்வு என்ற பழமொழிக்கு இவர் வாழ்வே ஓர் உதாரணமாகும்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி பிறந்த இவர், படிப்பது மட்டுமின்றி ராஷ்ட்ரிய சுயம்சேவக் இயக்கத்தில் ஒரு எளிய தொண்டனாக சேர்ந்து தனது சமுதாயப் பணியினை துவக்கினார். பிறகு ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதீய ஜனதாகட்சி ஆகிய கட்சிகளில் பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக 2002-ம் ஆண்டு உயர்ந்தவர். 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார்.
வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நீட்டிப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்த விழாவில் கண்டிப்பாக வெங்கையா நாயுடு பங்கேற்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாத நாளான சனிக்கிழமை அன்றுதான் நடத்தப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டிருந்தேன். இந்த விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தது இவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் உற்ற நண்பர் என்று கூறுவார்கள். அதே உறவும், அன்பும் இன்றளவும் நம் மீது வைத்திருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவர். மேலும், இவர் மத்திய நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது, என்னுடன் இணைந்து திருமங்கலம் முதல் நேரு பார்க் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை 14.5.2017 அன்று தொடங்கி வைத்த நிகழ்வு எனது மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. மேலும், அன்றே தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்களை பற்றி ஆய்வு செய்து, நமது மாநில திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு ஒரு பாலமாக செயல்பட்டவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று சொன்னால்அது மிகையாகாது.
ஜெயலலிதாவுக்கு பின்னர் அவரது அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார். போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு. பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு. பேண வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா பொன் மொழிகளின் அடிப்படையில் இன்றும் மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று சொன்னால் அது மிகையாகாது.
பல ஆண்டுகளாக மாநிலங்கள் அவையில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம், அனைத்து கட்சியினரிடம் நண்பராக பழகும் இவரது இயல்பான குணம், ஆகியவை தான் வெங்கையா நாயுடுவை இன்று துணை ஜனாதிபதியாக உயர்த்தி இருக்கிறது. அரசுப் பதவியை விட மக்கள் பணி என்பதுதான் முக்கியம் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவர். ஏற்றுக் கொண்ட பதவிகளில் அனுபவங்களையும், அறிவையும், அர்ப்பணிப்பையும் கொண்டு திறமையாக பணியாற்றி, அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவர் வெங்கையாநாயுடு என்று அவர் புகழாரம் சூட்டினார்.
இவர், தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தனது உரையின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் தமிழில் உரையாடுவார். சமீபத்தில் சென்னையில் மாணவர்களிடையே பேசுகையில், தாய்மொழி கண் போன்றது என்றும், தாய்நாடு, தாய்மொழி மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக் கூடாது என்றும் ஒரு உயரிய அறிவுரையை கூறினார். வீட்டிலும், வெளியிலும் தாய்மொழியில் தான் பேச வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இவர், தமிழும், தமிழ்நாடும் தன் மனதிற்கு நெருக்கமானவை என்றுகூறியுள்ளார்.
உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் சென்னை மாநகரம் ஈர்த்து வருகிறது என்றும், மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு ஒரு உயர்ந்த இடத்தைஅடைந்துள்ளதாகவும், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பெருமையுடன்குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில் தமிழ்நாடு கலாசாரம் பாரம்பரியத்தில் உயர்ந்த இடத்தை வகிக்கிறது என்றும் என்னுடைய இதயத்தில் தமிழ்நாடு நெருக்கமான இடத்தில் இருக்கிறது நான் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்ட மிகச் சிறந்த மாநிலம் தமிழகம் என்றும் நிதி ஆயோக்கில் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீது இவர் வைத்துள்ள ஈடுபாட்டையும், அன்பையும், பாசத்தையும் காட்டுவதாக இந்த நிகழ்வுகள் உள்ளன. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.