எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள ஏரிகள், குளங்களை உபரிநீர் மூலமாக நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி சேலம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேற்றுகின்ற பொழுது, நமக்கு தேவையான நீர் கிடைக்கும். 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கி விட்டது என்ற செய்தியையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் கரூரில் இணைக்கப்படும். அதற்கு மேல் உள்ள பகுதிகள் அனைத்தும் நீரேற்று மூலமாக இரண்டு பகுதியில் இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நீரை கொடுப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொழுதுகூட, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, சேலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 100 ஏரிகளுக்கு ரூபாய் 565 கோடி செலவில் மேட்டூர் உபரிநீரை தேக்கி வைக்க இருக்கிறோம்.
அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கருப்பணன் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ராஜா ஆகியோர் தங்களுடைய வறட்சியான பகுதியில் பருவமழை காலங்களில் மேட்டூரிலிருந்து வெளியேறுகின்ற உபரிநீரை எங்கள் பகுதிக்கும் திருப்பி விட வேண்டும். எங்கள் பகுதியில் இருக்கின்ற ஏரிகளிலும் நிரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசு அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் வருகின்ற பொழுது, அந்தப் பகுதி மக்களுக்கும், ஈரோடு மாவட்டத்திலிருக்கின்ற பாசனம் பெறாத அந்த ஏரிகளுக்கும் மேட்டூர் உபரி நீரை தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படும் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற மக்களுக்கும் மேட்டூர் தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கு இருக்கின்ற ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். அதே போல, மேட்டூர் அணையிலிருந்து கரூர் வரையிலுள்ள இரண்டு பகுதியிலும் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்பெறுகின்ற விதமாக அங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள் முழுவதும் நிரப்புகின்ற விதமாக உபரிநீரை மூலமாக நிரப்பப்படும் என்ற செய்தியையும், இதற்காக 25 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, ஒரு சொட்டுநீர் கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையில் எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக 2 ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், 3 ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர்களை நியமித்து பருவமழை காலங்களில் எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ அதையெல்லாம் கணக்கிட்டு, அந்த தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்று திட்டம் தீட்டி எங்களுக்கு அறிக்கையாக தர இருக்கின்றார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாயிகள் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டுநீர் பாசனத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். சொட்டுநீர் பாசனத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்த அரசு எங்களுடைய அரசு. ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருந்தால் 100 சதவீதம் மானியமும், அதற்கு மேல் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், 75 சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகளை விவசாயிகளுக்குத் தருகிறோம். எனவே, நிலத்தடி நீர் குறைவாக இருந்தால் கூட, சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக வேளாண் பணிகளை மேற்கொள்கின்ற பொழுது, விவசாயிகள் குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலை பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கின்றோம். வேளாண் பெருமக்களுக்குத் தேவையான டிராக்டர், வேளாண் கருவிகள், விதைகள், உரம் மானிய விலையில் கொடுக்கின்றோம். வட்டியில்லாத பயிர்க்கடன் கொடுக்கிறோம். இவ்வாறு அனைத்தையும் முழுமையாக கொடுக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் ஓமலூரிலிருந்து தாரமங்கலம் செல்கின்ற வழியில் மிகப் பெரிய மார்க்கெட் ஏற்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை இங்கு ஆன்-லைனில் விற்கலாம். விலை கட்டுப்படியாகாத சமயங்களில் அங்கேயுள்ள குளிர்பதனக் கிடங்குகளில் வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாதத்திற்கு வாடகை ஏதும் கிடையாது. அங்கே விவசாயிகள், வியாபாரிகள் குளிப்பதற்கு, தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய இருக்கிறோம். அதே போல, அவ்விடத்திலேயே பணம் கிடைப்பதற்கு வசதியும் செய்ய இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளின் நலனுக்காக எங்களுடைய அரசால் செய்யப்படுகின்றது. இங்கு மட்டுமல்லாமல், பரிட்சார்த்த முறையில் தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆங்காங்கே இந்தத் திட்டத்தை செயலாக்கத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள், நான்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, மேட்டூர் கிழக்கு கரை, மேற்கு கரை கால்வாய்கள் முழுவதையும், மேட்டூர் அணையிலிருந்து அது முடிகின்ற எல்லை வரை கான்கிரீட் கால்வாயாக அமைக்கும் திட்டம் ரூ. 600 கோடியில் அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாசனத்திற்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை அம்மாவின் அரசு செய்து கொண்டிருக்கின்றது. இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இது போன்று கான்கிரீட் கால்வாய்கள் உருவாக்கப்படும். டெல்டா பாசன கால்வாய்களையும் சீர் செய்வதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கேட்டுள்ளோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் டெல்டா பாசன கால்வாய்கள் அனைத்தும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 20 சதவிகிதம் தண்ணீர் வீணாகாமல் மிச்சப்படுவதோடு ஆண்டுதோறும் தூர்வாரும் நிலையும் மாறும்.
பொள்ளாச்சி பகுதியில் பரிட்சார்த்த முறையில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசனம் மூலமாக சுமார் 7,500 ஏக்கர் நிலத்தை எடுத்து அதற்குத் தேவையான கருவிகளை அரசாங்கமே கொடுத்து அந்தத் திட்டத்தை உருவாக்க இருக்கின்றது. ஒரு ஏக்கருக்கு பயன்படும் நீர் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் பாய்ச்சுகின்ற பொழுது கிட்டத்தட்ட 7 ஏக்கர் நிலத்திற்கு பயன்படுகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அம்மாவின் அரசு திட்டமிட்டிருக்கின்றது. இவைகளெல்லாம், குறுகிய காலத்தில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து உங்களுக்காக செய்யப்பட்ட நல்ல திட்டங்கள் என்பதை தெரிவித்து ஜெயலலிதா திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்திருக்கின்றோம். பண்ணைத் திட்டத்தையும் செயல்படுத்தியிருக்கின்றோம். இவ்வாறு, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வாரி, வாரி அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்து தற்போது 101 அடியை எட்டி, 66 டி.எம்.சி. தண்ணீரோடு இருக்கின்ற மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர தண்ணீர் திறந்து விட்டிருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.