எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாதுகாப்பு துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி நேற்று நண்பகல் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. அருண்ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி ஆகியோரது அடுத்தடுத்த மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு மிகப் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.
தீவிர சிகிச்சை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக கடந்த 9-ம் தேதியன்று அவருக்கு மிக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சோர்வான நிலையில் அவர் தளர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து
அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மூத்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
காலமானார்
இந்த நிலையில் அருண் ஜேட்லி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாக தெரிவிக்கப்பட்டது. அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி, அருண் ஜெட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் அருண் ஜெட்லி நேற்று நண்பகலில் காலமானார்.
பா.ஜ.க. மூத்த தலைவரான ஜெட்லி மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர். நிதி அமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியவர் இவரே. 66 வயதான அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசிலும், நரேந்திர மோடி அரசிலும் அமைச்சராக இருந்தவர். வாஜ்பாய் ஆட்சியில் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். பா.ஜ.க.வின் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நிதித்துறை, பாதுகாப்புத்துறை, சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
டெல்லியில் கல்லூரி மாணவராக இருந்த போது அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் இவர். 1975 -77ல் நாட்டில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது அருண் ஜெட்லி கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். 2009 - 2014-ம் ஆண்டுகள் வரை மாநிலங்களைவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜெட்லி இருந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
இருபெரும் தலைவர்கள் ..
இவரது மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அருண் ஜெட்லியின் துயரமான மறைவை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது உடல் நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜூம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இருவருமே நரேந்திர மோடியின் 2-வது அரசில் அமைச்சர்களாக பதவி வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். அவரது மறைவால் பாரதீய ஜனதா கட்சி பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாரதீய ஜனதா கட்சிக்கு தற்போது மற்றும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகிய இரு பெரும் தலைவர்களின் அடுத்தடுத்த மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு மிகப் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.
பிரதமர் வேதனை
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கடந்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவரால் தனது பணியை கவனிக்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இது குறித்து கூறுகையில், விலைமதிப்பற்ற ஒரு நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையோடு கூறியுள்ளார். இதே போல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அருண்ஜெட்லியின் மறைவால் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லிக்கு சங்கீதா என்ற மனைவியும், ரோஹன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர். அருண் ஜெட்லி மறைவு குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெட்லி குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மத்திய அமைச்சரவையில் ஒரு மிகப் பெரும் திறமைசாலியாக கருதப்பட்டவர் அருண்ஜெட்லி. அவரது மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.