முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்கிறது பெற்றோர்களின் அலட்சியம்... திண்டுக்கல்லில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திண்டுக்கல் பொன்மாந்துரை புதுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ரீகன்(6), பிரசாந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜசேகர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று தேவி குடிநீர் பிடிப்பதறகாக அருகில் உள்ள குழாய்க்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்த் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டான். தண்ணீர் பிடித்து விட்டு தனது மகனை தேடி பார்த்த போது தொட்டிக்குள் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக பிரசாந்த் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோரின் அலட்சியமே காரணம் என்று அனைவராலும் உணரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்தன. அதன் வரிசையில் திண்டுக்கல்லில் தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து