முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெண்டை அறுவடையில் வேளாண் கல்லூரி மாணவிகள்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.-திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் வெண்டை அறுவடைப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை 4-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் தர்ஷினிபிரியா, திவ்யா, கௌரி, இலக்கியா, மன்மிதா, கீதப்பிரியா, கோபிகா, கௌரிகார்த்திகா ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கச்சியம்மாபட்டி கிராமத்தில் வெண்டைக்காய் அறுவடைப்பணியில் ஈடுபட்டு, வெண்டையில் புதிய ரககங்கள் மற்றும் அதன் சிறப்பு இயல்புகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். மேலும் வெண்டையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து