முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொது செயலாளர் நியமனம்  செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில்,பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி தர்மபுரி, சென்னை வடக்கு, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிப்பட்டுள்ளனர். சிங்காரம்- தர்மபுரி, மாதவரம் மூர்த்தி- சென்னை வடக்கு, நாஞ்சில் வின்சென்ட்-கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்- காஞ்சிபுரம், அய்யாதுரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் அ.தி.மு.க. கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து