முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      இந்தியா
Uttarakhand-Forest-Fire-202

நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. 

உத்தராகண்ட் மாநிலம்,  நைனிடால் மலைப் பகுதியில் வெப்பத்தின் காரணமாக காட்டூத்தீ ஏற்பட்டுள்ளது.  இது கொஞ்சம் கொஞ்சமாக பரவி நைனிடால் நகரை அடைந்துள்ளது.  இந்த தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம்,  தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து அவசர நடவடிக்கையாக உத்தராகண்ட் அரசு, இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.  அதன்பேரில் ஹெலிகாப்டர் மூலம், ஏரியிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்பட்டு, காட்டுத் தீ எரிந்து வரும் பகுதியில் ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

நைனிடால் மாவட்ட தலைமையகத்திற்கு அருகில் உள்ள காட்டில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹைகோர்ட் காலனி மக்களுக்கு இது பெரும்  அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து