முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை விருந்தில் கலந்து கொண்ட வீரர்கள் கைது

திங்கட்கிழமை, 21 மே 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மே.22 - மும்பையில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட 2 ஐ.பி.எல். வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5-வது ஐ.பி.எல்.,20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஸ்பாட் பிக்சிங், சாருக்கான் விவகாரம், அமெரிக்க பெண் பாலியல் விவகாரம் போன்றவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை ஜூகு பகுதியில் உள்ள ஒக்வுட்ஸ் ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான ஆண்களும், பெண்களும், வெளி நாட்டவர்களும் போதையில் மூழ்கியிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 58 ஆண்கள், 38 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் வெளிநாட்டை சேர்நதவர்கள் 10 பேரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 110 கிராம் சோனகன் எனும் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த போதை விருந்தில் ஐ.பி.எல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ராகுல் சர்மா, வெயின் பர்னல் ஆகியோர் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை ராகுல்சர்மா மறுத்துள்ளார். இதுகுறித்து ராகுல் சர்மா கூறுகையில், நான் பிறந்தநாள் பார்ட்டிக்காக ஒக்வுட்ஸ் ஓட்டலுக்கு சென்றேன். நான் செல்லும் போது அந்த ஓட்டலில் யாரும் இல்லை என்றார். மேலும் ராகுல் சர்மாவின் தாயார் தனது மகன் போதை விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில்  மேலும் நடிகர், நடிகைகளும் சிக்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்