முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலிய மாலுமிகள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

கோழிக்கோடு. ஜூன். 3  - இரண்டு  இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ஹ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  இரண்டு  இத்தாலிய  மாலுமிகள் மீதான விசாரணையை  கோழிக்கோடு  கோர்ட்டு  வருகிற 18 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு  முன்பு அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை  அந்த வழியாக வந்த இத்தாலிய கப்பல் ஒன்றின் மாலுமிகள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். 

இதை அடுத்து அந்த இரு மாலுமிகளும்  கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  என்றாலும் கூட  இந்த வழக்கு கோழிக்கோட்டு செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி பி.டி. ராஜன் முன்னிலையில்  நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது  லட்டோர் மசிமில்லியானோ, சல்வாட்டோர் ஜிரோனி என்ற அந்த இரு இத்தாலிய மாலுமிகளும் கோர்ட்டில் ஆஜரானார்கள். 

பிறகு இந்த  வழக்கு விசாரணையை  வருகிற 18 ம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்