முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - புனே வாரியர்ஸ் அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப். 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே வா ரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு ஐ.பி.எல். தொடரில் கிடைத்த முதல் வெற்றியாகும். 

இந்தப் போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தரப்பில், ஜெஸ்சே ரைடர் ,மன்ஹாஸ், ராபின் உத்தப்பா மற்றும் கேப்டன் யுவராஜ் சிங் ஆகி யோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ஏ.சி. தாமஸ், எஸ். பி. வாக் ஆகி யோர் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இத னால் பஞ்சாப் அணியின் ரன் ரேட் குறைந்தது. 

இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் 5 -வது லீக் ஆட்டம் பகலிரவு போட்டியாக நடந்தது. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக பூவா தலையாவில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலி ல் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில், கேப்டன் கில் கிறிஸ்ட் மற்றும் மார்ஸ் ஆகிய இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களமிறங்கிய அந்த அணியால் புனே அணியின் பந் து வீச்சை சமாளிக்க முடியவில்லை. இறுதியில் அந்த அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்னில் சுருண்டது. 

அந்த அணி சார்பில் மெக்லாரன் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். லாரன் அதிகபட்சமாக, 43 பந்தில் 51 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். 

புனே வாரியர்ஸ் அணி தரப்பில், எஸ். பி. வாக் 16 ரன்னைக் கொடுத் து 3 விக்கெட்டை சாய்த்தார். ஏ.சி. தாமஸ் 27 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பர்னெல் மற்றும் ரைடர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

புனே வாரியர்ஸ் அணி 113 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்னை எடுத்தது. 

இதனால் புனே வாரியர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், 41 பந் துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெ ற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்த து. 

புனே அணி சார்பில், மன்ஹாஸ் 32 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதி ல் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். ரைடர் 17 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர, ராபின் உத்தப்பா 14 பந்தில் 22 ரன்னையும், கேப்டன் யுவராஜ் சிங் 15 பந்தில் 21 ரன்னையும் எடுத்தனர். 

பஞ்சாப் அணி தரப்பில் பிரவீன் குமார் 28 ரன்னைக் கொடுத்து 1 விக் கெட் எடுத்தார். தவிர, மெக்லாரன் மற்றும் ஏ.எம். நாயர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக எஸ். பி. வாக் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்