முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் சாய்னா தங்கம் வெல்வார் - டினேபான் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 27 - ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நெக்வால் தங்கம் வெல்வார் என்று டென்மார்க் பேட்மிண்டன் சாம்பியனான டினேபான் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - 

டென்மார்க் நாட்டின் பேட்மிண்டன் சாம்பியனான டினேபான் தலை நகரில் நிருபர்கலைச் சந்தித்தபோது, ஒலிம்பிக் போட்டி குறித்த கேள் விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். 

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தகுதி பெற்றவர் இந்திய பேட்மிண்ட ன் வீராங்கனை சாய்னா நெக்வால். வரும் 2012 - ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் சீனர் அல்லாத ஒருவ ராக சாய்னா நெக்வால் இம்முறை தங்கம் வெல்வார் என்ற நம்பிக் கை எனக்கு உள்ளது. 

இதனை சமீபத்தில் நடந்த இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பில் பட்டம் வென்ற டென்மார்க் நாட்டு பேட்மிண்டன் சாம்பியன் டினேபான் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது - 

சாய்னா ஒரு சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை. எதிரில் ஆடும் வீரா ங்கனைக்கு கடும் நெருக்கடி தரக் கூடியவர். சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி வீராங்கனைகளை திணறவைப்பார். 

அவரை எதிர்த்து ஆடி வெல்வது எளிதல்ல. அந்த அளவுக்கு ஆட்ட நுணுக்கங்கள அறிந்து வைத்துள்ளார் சாய்னா நெக்வால். உலகின் சிறந் த வீராங்கனைகளில் ஒருவராக திகழ்கிறார். 

ஒலிம்பிக்கில் சீன மற்றும் கொரிய வீராங்கனைகள் தான் சாய்னாவுக் கு நெருக்கடி தரக்கூடியவர்கள். ஆனால் இம்முறை ஒலிம்பிக்கில் அவ ர்களை வீழ்த்தி சாய்னா தங்கப் பதக்கம் வெல்வார் என்று நம்புகிறே ன். இவ்வாறு டினேபான் கூறினார். 

இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை டினேபானை தோற்கடி த்தவர் சாய்னா நெக்வால் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெ க்வால் கடந்த 2 வருடங்களாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங் கு கொண்டு வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். இதில் பல்வேறு முன் னணி வீராங்கனைகளையும் அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்