எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.13 - மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட புதியதாக 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தயாநிதிமாறன் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான தயாநிதி மாறனும் ஏர்செல் நிறுவனம் விற்பனை விவாகரத்தில் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் 3 கேபினட் அமைச்சர்கள் பதவி காலியாக இருந்தது. அதனால் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மன்மோகன் சிங் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்வதையும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்தார்.
4 பேருக்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் சந்திர தியோ மலைவாழ் மக்கள் நலம் மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெனி பிரசாத் வர்மா, எஃகு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் திவேரி ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்தி இலாகாவை மம்தா பானர்ஜி வைத்திருந்தார். அவரது கட்சிக்காரருக்கே இந்த இலாகா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்த 4 கேபினட் அமைச்சர்களை தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தவர். ஸ்ரீகாந்த் ஜெனா,புள்ளி இயல் திட்ட அமுலாக்க, இரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் சிங் கெடோவர், வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைச்சர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதீப் பந்தோப்த்யாயா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சரண்தாஸ் மகந்த், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங்,உள்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிலிந்த் தியோரா,தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள முரளி தியோராவின் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் சுக்லா, பாராளுமன்ற விவகாரத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சில மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விலாஸ் ராவ் தேஷ்முக்( அறிவியல், தொழில் நுட்பம்) வீரப்பமொய்லி (கம்பெனி விவகாரம்) ஆனந்த் சர்மா (வணிகம்,தொழில், கூடுதல் பொறுப்பாக ஜவுளித்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது) பி.கே.பன்சால்(பாராளுமன்ற விவகாரம். இவர் நீர்வளத்துறையும் கூடுதலாக கவனிப்பார்) சல்மான் குர்ஷீத் (சட்டம், நீதி. இவர் சிறுபான்மையினர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார்) இ.அகமது வெளியுறவுத்துறை மற்றும் மனிதவளத்துறை மேம்பாடு) புதுவையை சேர்ந்த நாராயணசாமி ( தனிநபர் நலன், பென்சன்,மக்கள் குறை தீர்ப்பு பிரதமர் அலுவலகம்) ஹரீஸ் ரவுத் (விவசாயம்,உணவு பதப்படுத்தும் தொழில், பாராளுமன்ற விவகாரம்) முகுல்ராய் (கப்பல்துறை) அஸ்வினி குமார் (திட்டம், அறிவியல், தொழில்நுட்பம்)
இந்த நிலையில் ராஜினாமா செய்த தயாநிதிமாறன், முரளி தியோரா,ஹண்டிக், காந்திலால் புரியா ஆகியோர்களின் அமைச்சர் பதவி ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மேலும் மத்திய அமைச்சர்கள் எம்.எஸ்.கில், சாய் பிரதாப், அருண் எஸ்.யாதவ் ஆகியோர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்கிவிட்டார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சரியாக 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், கபில் சிபல் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.