முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயசாந்தியின் நிலம் ஆக்கிரமிப்பு: ஒருவர் கைது

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.16 - கோயம்பேடு அருகே நடிகை விஜயசாந்தியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி முன்னாள் தி.மு.க. எம்.பி. கிருஷ்ணசாமியின் தம்பி கைது செய்யப்பட்டார். இது குறித்த விபரம்வருமாறு:

நடிகை விஜயசாந்தி உள்பட 8 பேருக்கு சொந்தமான 5.15 ஏக்கர் இடம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது. ரூ.130 கோடி மதிப்பிலான இந்த நிலம் போலி ஆவணங்கள் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. 

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்து 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அதே இடத்தை ரூ.70 கோடிக்கு விற்பனை செய்ய பேரம் பேசப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. 

துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர் இது தொடர்பாக அயனாவரத்தை சேர்ந்த வில்வமணி(49) என்ற நில புரோக்கர் கைது செய்யப்பட்டார். இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.பி. கிருஷ்ணசாமியின் தம்பி என்பது தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்