எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி,மார்ச். - 2 - தமிழ்நாட்டில் நிலவும் மோசமான நிலையை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோகுல இந்திரா பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் இமாலய ஊழலால் இந்தியா உலக அளவில் தலைகுனிய நேரிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்றடைந்தது தெள்ளத் தெளிவாகி விட்டது. முதல்வர் பதவியில் இருக்கும் கருணாநிதி தன் குடும்ப சுகத்திற்காக மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் முதலிடம் வகித்த தமிழகம் இன்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தினமும் கொள்ளை, கொலை, லஞ்சம், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என தமிழக மக்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.
காரைக்குடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பத்திரப் பதிவு நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குவதற்கு இப்பகுதி வாழ் மக்களுடன் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தடைபட்ட காலம் முதல் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் செய்தவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இத்தொழில் முற்றிலுமாக இப்பகுதியில் நலிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் வரப் போகிறது என்ற காரணத்தினால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் நின்றாலும் வர முடியாது என்ற எண்ணத்தால் இப்பகுதியில் பத்திரப் பதிவு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தால் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
காங்கிரசார் தி.மு.க.வுடன் இணைந்திருக்க வேண்டாம். அப்படி இணைந்தால் அழிந்து விடுவீர்கள் என்று ஜெயலலிதா அன்றே சொன்னார். காங்கிரசார் கேட்கவில்லை. ஆனால் தி.மு.க.வால் காங்கிரஸ் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகி விட்டது. பத்திரப் பதிவு தடை நீக்கம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறியவுடன் உடனடியாக தடை நீக்கம் செய்துள்ளனர். அதனையும் அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் செய்து விட்டனர் என்று கூறுகின்றனர். இதனை 2 தினங்கள் கழித்து அறிவிக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக செய்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி, குணசேகரன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் உமாதேவன், கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். மன்றம் தேர்போகி பாண்டி, இளைஞரணி பூராவயல் ராமு, சின்னையா அம்பலம், ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை, பொதுக்குழு உறுப்பினர் ஜாக்குலின் அலெக்ஸ், ஒன்றிய இளைஞரணி செயலர் ரவிச்சந்திரன், குழந்தை வேலு, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அய்யாசாமி, நாகலிங்கம், பூப்பாண்டியன், கவுன்சிலர்கள் அங்குராஜ், சேதுபதி, அருள்முருகன், கணேசன், கல்லல் ரவி, நல்லதம்பி, ராமு, தென்கரை சுப்பிரமணியன், அரியக்குடி மோகன், செல்லையா, குணசேகரன், ஆனந்தன், காளையார்கோவில் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் மெய்யப்பன், புதுவயல் நைனாமுகமது, சிவகங்கை ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் சங்குபாண்டி, அண்ணாநகர் சுப்பிரமணி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சிரஞ்சீவி சீனிவாசன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ