முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 13-ம் தேதி மீண்டும் தாக்குதல்: முஜாஹிதீன்

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.9 - வரும் 13-ம் தேதி நாங்கள் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று இந்திய முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. இதனையொட்டி முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஐகோர்ட்டு முன்பு நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 12 பேர் பலியானார்கள் மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நாங்கள்தான் நடத்தினோம் என்று ஹூஜ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. இந்த இயக்கம் வங்கதேசத்தில் இருந்துகொண்டு செயல்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் நாங்கள் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று முஜாஹிதீன் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான இந்திய முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதலை வரும் 13-ம் தேதி நடத்துவோம் என்று ஈ மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. மக்கள் கூடும் ஒரு வர்த்தக வளாகத்தில் இந்த தாக்குதல் நடக்கும்  என்றும் அந்த ஈ மெயிலில் கூறப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தைலையொட்டி மும்பை,டெல்லி,கொல்கத்தா, போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்