முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவனை கொன்ற சவுதி பெண் தலை துண்டிக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

துபாய், அக்.21- சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை கொலை செய்தாள். இதற்காக அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்தப் பெண்ணின் தலையை துண்டித்து இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த கஜாலா என்ற பெண் தனது கணவர் அலி அல் ஷேரி என்பவரை தீவைத்து கொளுத்தி கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு வெளியான அடுத்த நாளே அந்த பெண்ணின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூங்கிக்கொண்டிருந்த தனது கணவரை அதே அறையில் வைத்து பூட்டி அந்த பெண் தீவைத்து கொலை செய்துள்ளார். இது கொடூரமான குற்றம்  என்பதால் அந்த பெண்ணுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்