எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, மார்ச் 12 - ஜப்பானில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமிப் பேரலைகளும் எழுந்தன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பூகம்ப இடிபாடுகளிலும், சுனாமி பேரலைகளிலும் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஜப்பான் அமைச்சரவை பிரதமர் தலைமையில் அவரச ஆலோசனை நடத்தி வருகிறது.
பூகோள ரீதியாக தீவு நாடான ஜப்பான் பூகம்ப மண்டலத்திற்குள் இருக்கிறது. இங்கு அடிக்கடி நில நடுக்கங்களும், அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகளும் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் பல்லாயிரம்பேர் பலியானார்கள். இப்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானை தாக்கியது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் சுனாமி பேரலைகள் ஆறு மீட்டர் உயரத்திற்கு சீறிவந்து நிலப்பகுதிக்குள் நுழைந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் பசிபிக் மகாசமுத்திரத்தை ஒட்டியுள்ள ரஷ்யா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிகோ, பெரு, ஹவாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாகி, புகுஷிமா போன்ற முக்கிய நகரங்களை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி பேரலைகள் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நிலப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வழியில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் அனைத்தும் ஏதோ தூசுகள் போல வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பூமிக்கு கீழை 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு சாலைகளிலும், உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். ஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சில இடங்களில் கட்டிடங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கின. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 8.9 ஆக பதிவாகி உள்ளது என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1995 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்றும் அந்த மையம் கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி பேரலை தாக்குதல் காரணமாக டோக்கியோ உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல சாலை போக்குவரத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ நகர் உட்பட பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
பூகம்ப தாக்குதல் காரணமாக ஜப்பானில் உள்ள முக்கியமான அணு மின்சார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த அணு மின்சார நிலையங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இப்படி ஒரு நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளதால் அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையில் ஜப்பான் அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
டோக்கியோ, ஒசாகி ஆகிய நகரங்களில் 30 பேர் பலியானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் மக்கள் தொகை மிகுந்த ஹோன்சு தீவுதான் இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு பூகம்பத்தை தான் தனது வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று ஜப்பான் வாசி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக 900 மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருக்க, நகரின் மையப் பகுதியோ எரிந்துகொண்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்டாய் விமான நிலையம் முழுவதுமாக சுனாமி பேரலைகளால் மூழ்கடிக்கப்பட்டது. சுனாமிக்கு பயந்து விமான நிலையத்தில் இருந்த அனைவரும் விமான நிலையத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மீது ஏறி உயிர்தப்பினர். விமான நிலையத்தின் ஓடுதளங்கள் நீருக்குள் இருக்கின்றன. எண்ணை கிணறுகள் தீப்பற்றி அதிலிருந்து கறும்புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது.
சுனாமி ஏற்பட்டபோது கடலில் இருந்த மீன்பிடி படகுகள், சிறிய கப்பல்கள் ஆகியவை பேரலைகளால் நகருக்குள் கொண்டுவரப்பட்டன. ஜப்பானில் இரு தீவுகளை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் ஆழிப் பேரலைகளால் தாக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
பூகம்பம், சுனாமி இரண்டும் ஒரே நேரத்தில் ஜப்பானை தாக்கியதால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் அதிக அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின்போது 10 ஆயிரம் கோடி டாலருக்கு ஜப்பானில் சேதங்கள் ஏற்பட்டன. பூகம்ப வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திய 1995 ல் ஏற்பட்ட பூகம்பம்தான்.
ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர்கள் சகஜமான சம்பவமாகிவிட்டதால் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே ஜப்பான் கடலோர பகுதிகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை சங்குகள் ஒலித்தன. இதனால் கடலோர பகுதியில் இருந்த மக்கள் பல்வேறு உயிர்காக்கும் வாகனங்கள் மூலம் 5 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலப்பகுதிக்கு சென்று தங்கிவிட்டனர். இதனால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. என்றாலும் பூகம்பம், சுனாமியால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு தற்காலிக மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.