முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி பாடகி மதுமிதா வீட்டில் மர்ம ஆசாமிகள் கைவரிசை

புதன்கிழமை, 16 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 -​ பின்னணி பாடகி மதுமிதா வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி கண்பார்வை குறைபாடுல்ல பெண்ணிடம் மின்சாரம் பழுது பார்க்க கணவர் வரச்சொன்னதாக கூறி நூதன முறையில் வீட்டிலிருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள சி வார்டு ரோட்டை சேர்ந்தவர் ஓ.எஸ்.மணி (67). ஓய்வு பெற்ற சுங்க இலாகா அதிகாரி. இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு சரளாமணி, மதுமிதா என 2 மகள்கள் உள்ளனர். 

இவர்கள் சினிமா பின்னணி பாடகிகளாக உள்ளனர். நேற்று மாலை ஓ.எஸ்.மணியும், அவரது மகள்களும் வெளியே சென்று விட்டனர். ஹேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவருக்கு கண்பார்வை தெரியாது. இதை அறிந்த 2 மர்ம மனிதர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். உங்கள் வீட்டில் மின்சாரம் பழுதடைந்துள்ளதாகவும், அதை சீரமைக் கும்படியும் உங்கள் கணவர் ஓ.எஸ்.மணி எங்களை அனுப்பி வைத்தார் என தெரிவித்தனர்.

கண்பார்வை இல்லாததால் அதை உண்மை என்று நம்பிய ஹேமலதா இவர்களை வீட்டிற்குள் அனுமதித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவர்கள் மின்சாரம் பழுது பார்ப்பது போன்று நடித்து பீரோவை திறந்தனர். பின்னர் அங்கு வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகள், மற்றும் ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம். இதற்கிடையே இரவு வீட்டிற்கு வந்த ஓ.எஸ்.மணி பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த அவர் திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் மோப்ப நாய் ராணி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்