முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தடுப்பணைகள் அவசியமாம்! அமைச்சர்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பெங்களூரூ - குடிநீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டுவது அவசியம். குடிநீர் திட்டத்துக்காக தடுப்பணைகள் கட்டும் கர்நாடகத்தின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்று மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார். பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,
கர்நாடக மாநிலம் மேக்கேநாட்டுவில் தடுப்பணைகள் கட்டுவதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெறும். இதில் கர்நாடகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். மக்களவை கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சி மக்களவை உறுப்பினர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு சென்று தடுப்பணைகள் கட்டுவதன் அவசியம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து