முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம்கோர்ட்டில் வலியுறுத்தப்படும் - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 28 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரும் 11 ம்தேதி உச்சநீதி மன்ற விசாரணையின்போது வலியுறுத்தப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,

இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக போராடி பெற்றவெற்றிகளில் ஒரு மைல் கல், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசின் கெஜட்டில்2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ம்தேதி அன்று வெளியிட செய்ததாகும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள். நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையின் பரிந்துரைப்படி, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு கடிதங்கள் வாயிலாகவும்,பிரதமரை நேரில் சந்தித்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

2016-17 பாசன ஆண்டில், தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நீரை கர்நாடகம் வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு விசாரணைக்குவந்தபோது, உச்சநீதிமன்றம் தனது 20.09.2016 நாளிட்ட ஆணையில், நடுவர்மன்ற இறுதி ஆணைப்படிகாவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என ஆணையிட்டது. மீண்டும் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30.ம்தேதி ஆணையை உறுதி செய்து, படுகை மாநிலங்கள
தங்கள் உறுப்பினர்களை 01.10.2016-க்குள் நியமனம் செய்ய வேண்டும் என ஆணையிட்டது.

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்ச நீதிமன்ற ஆணைகளை மாற்றிஅமைக்கக்கோரி 03.10.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை மத்திய அரசு தாக்கல்செய்தது. இம்மனு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ம்தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம், காவேரிமேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிவைத்து ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் படுகை மாநிலங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டுமனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உகந்தவை என உச்ச நீதிமன்றம் 09.12.2016 அன்றுஆணையிட்டுள்ளது. இம்மனுக்கள் மீது ஆரம்பகட்ட வாதங்கள் கடந்த பிப்ரவரி 7 ம்தேதி நடைபெற்றன.அதன் பிறகு மார்ச் 21வ ம்தேதி இவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு, வரும் ஜூலை 11 ம்தேதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மீண்டும்வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து