முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலை. அறிவிப்பு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் (23-ம் தேதி) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

நிவாரண பணிகள்...

கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வுகள் ஒத்திவைப்பு

இந்நிலையில்,   திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (22-ம் தேதி), நாளை (23-ம் தேதி) மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து