முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியை டோனியை விட யாரும் சிறப்பாக வழிநடத்த முடியாது: பி.சி.சி.ஐ !

வியாழக்கிழமை, 9 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியை டோனியை விட யாரும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்று  பி.சி.சி.ஐ  தெரிவித்துள்ளது.

வழிகாட்டியாக... 

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இந்த முறை அவர் அணியின் வழிகாட்டியாக பணியாற்ற உள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 துவங்கி நவம்பர் 14 வரை நடை பெற உள்ளது. 

நியமிக்கப்பட்டது...

இந்திய அணியுடன் டோனி இணைந்திருப்பது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது. இந்த சூழலில் டி-20 உலக கோப்பையில் இந்திய அணியின் வழிகாட்டியாக டோனி நியமிக்கப்பட்டது ஏன்? என்ற விளக்கத்தை இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில்.,

டோனி மட்டும்... 

“இந்த இந்திய அணியை வழிநடத்தி செல்ல டோனி மட்டும் தான் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறம்பட செய்துவிட முடியாது. அணியில் அவர் இருப்பதே வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். அதை எங்கள் செயலாளர் ஜெய் ஷாவும் விரும்பினார். அதன் படி டோனிக்கு போன் செய்து அவரது விருபத்தையும் தெரிந்து கொண்ட பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து