எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________________________
டிராவிட்டுக்கு ரோகித் பாராட்டு
இந்திய அணியின் கேப்டனாக முதல் கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா உருக்கமான வாழ்த்தையும் பாரட்டையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் ராகுல் டிராவிட்தான் உங்களுடைய மனைவி என்று தம்முடைய மனைவி ரித்திகா அடிக்கடி சொல்வார் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளதாவது., பின்வருமாறு. "டியர் ராகுல் பாய். இதைப் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் அதை சரியாக செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. எனவே என்னுடைய முயற்சி இதோ. என்னுடைய சிறு வயது நாட்களிலிருந்தே பல பில்லியன் ரசிகர்களைப் போல நானும் உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனால் அதையும் தாண்டி உங்களுடன் நெருக்கமாக வேலை செய்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
____________________________________________________________________________
முகமது சிராஜூக்கு அரசுப்பணி
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் மரைன் டிரைவ் பகுதியிலிருந்து வான்கடே மைதானம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி பேரணி சென்றனர். கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.11 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஐதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சேர்ந்த முகமது சிராஜை, தெலங்கானா முதல் - மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாநில அரசின் சார்பில் சிராஜுக்கு ஐதராபாத்தில் ஒரு வீடும், அரசுப் பணியும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
____________________________________________________________________________
கோலிக்கு வந்த புது பிரச்சினை
விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன்8 கம்யூன் பப்' என்ற நிறுவனம் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோலிக்கு சொந்தமான பப் மட்டுமின்றி எம்ஜி சாலையில் இயங்கும் பல்வேறு பப்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் தற்போது விதிகளை மீறிய பப்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும் இது தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 6 days ago |
-
உ.பி.யில் நாளை முதல் நவ. 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து
06 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாளை 8-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை வ
-
டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டு நடித்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு
06 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
06 Oct 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 713 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்: சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு
06 Oct 2024மங்களூரு : கர்நாடகாவில் தொழிலதிபர் மாயமான நிலையில் அவரது கார் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கனடாவில் உணவகத்தில் வெயிட்டர் வேலைக்காக குவிந்த இந்திய மாணவர்கள்
06 Oct 2024ஒட்டாவா : கனடா ஓட்டல் ஒன்றில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் காத்திருந்த வீடியோ வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
06 Oct 2024சென்னை : இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் சபரிமலைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி : கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்
06 Oct 2024திருவனந்தபுரம் : நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்வர
-
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம்: பிரான்ஸ் அதிபர்
06 Oct 2024பாரிஸ் : இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித
-
மனைவியுடன் விமான சாகசத்தை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்
06 Oct 2024சென்னை : விமான சாகச நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு சென்று கண்டுகளித்தார்.
-
காலாண்டு விடுமுறை: திருச்செந்தூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
06 Oct 2024திருச்செந்தூர் : விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் நேற்று குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம
-
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்கிறேன் : கெஜ்ரிவால் விதித்த நிபந்தனை
06 Oct 2024புதுடெல்லி : பா.ஜ.க.
-
லெபனானில் 250 மீ. நீள சுரங்கத்தை தகர்த்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
06 Oct 2024டெல் அவிவ் : லெபனானின் தெற்கே அமைந்துள்ள சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
-
விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
06 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமஆன சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்க
-
அ.தி.மு.க. துவக்க விழா குறித்து வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
06 Oct 2024சென்னை : அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
06 Oct 2024புதுடெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கு
-
பாலியல் புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் நடிகர் சித்திக்
06 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.
-
மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
06 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
-
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று அமித்ஷா ஆலோசனை
06 Oct 2024புதுடெல்லி : நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7-ம் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
-
முல்லைப்பெரியாறில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
06 Oct 2024சென்னை : முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
யாருடன் விருந்து சாப்பிட பிடிக்கும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
06 Oct 2024புதுடெல்லி : வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யார் ஒருவருடன் விருந்து சாப்பிட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மத்தி
-
அரசுப் பள்ளிகளில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் இன்று துவக்கம்
06 Oct 2024சென்னை : அரசு பள்ளிகளில் கற்றல் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
-
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்கள் : லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது
06 Oct 2024சென்னை : இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம்: புதுவை முதல்வர்
06 Oct 2024புதுச்சேரி : நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
-
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய மே.வங்க ஜூனியர் டாக்டர்கள்
06 Oct 2024கொல்கத்தா : கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மேற்கு வங்கத்தில் ஜூனியர் டாக்டர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
-
நெசவாளர்களுக்கு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
06 Oct 2024சென்னை : நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்