முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து 2 நாளில் விலகுகிறேன் : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடெல்லி : டெல்லி முதல்வர் பதவியில் 2 நாளில் விலகவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது.

இருப்பினும், அதற்கு முன்பே ஜூன் 26-ம் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். 

அம்மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 13-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். வழக்கின் தகுதிநிலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது. ஒவ்வொரு வாய்தாவின்போதும் ஆஜராக வேண்டும். அமலாக்கத் துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும் என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினர்.

அமலாக்கத்துறை ஜாமீன் அளித்த போது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஜாமீன் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. கவர்னரின் ஒப்புதல் பெற தேவையில்லாத பட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. 

மேலும் சாட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த 13-ம் தேதி மாலை அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகவுள்ளேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும். 

முதல்வர் பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன். ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் துணிச்சலையும் உடைப்பதுதான் அவர்களின் லட்சியமாக இருந்தது. அதனால் என்னை சிறைக்கு அனுப்பினார்கள். 

ஆனால் நம்முடைய கட்சி உடையவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் சிறையிலிருந்த போது, ராஜினாமா செய்யவில்லை. நான் அவர்களின் பார்முலாவை தோல்வியடையச் செய்ய விரும்பினேன். 

ஒரு அரசை ஏன் சிறையில் இருந்து இயக்க முடியாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டது. சிறையில் இருந்தும் ஒரு அரசு இயங்க முடியும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து